கடலூர் செப், 17
கடலூர் மின் கட்டண உயர்வு மின் கட்டண உயர்வை அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் 16 ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மஞ்சக் குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான தாமோதரன், மாநில மீனவரணி இணை செயலாளர் தங்கமணி, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஆறுமுகம், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார் வரவேற்றார்.
மேலும் இதில் மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட துணை செயலாளர் தெய்வ.பக்கிரி, முன்னாள் நகர மன்ற தலைவர் சுப்பிரமணியன், கடலூர் மாநகர பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், மருத்துவ அணி செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் குமுதம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.