திருப்பத்தூர் செப், 15
ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜோலார்பேட்டை தேவராஜி, ஆம்பூர் வில்வநாதன், மாவட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் கவிதா தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கேற்றனர்.