Spread the love

ராமநாதபுரம் செப், 8

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் வேந்தோணி ஊராட்சியில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் திருநங்கைகள் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அவர்களுடன் கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான எல்லாவித அரசு உதவிகளும் அவர்களை வந்தடைய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனே உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் எதிர்பாராத இந்த வருகைக்கு திருநங்கைகள் தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *