திருவண்ணாமலை செப், 6
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து விழாவை நடத்தின.
இவ் னவிழாவுக்கு ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி, பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வித்துறை அலுவலர் கணேஷ்மூர்த்தி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கலந்து கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் உலமாக்களுக்கும் சைக்கிள்களை வழங்கினார்.
மேலும் 2014 மற்றும் 2018-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் வாரிசுதாரர்கள் 4 பேருக்கும் மற்றும் சத்துணவு மையத்தில் பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கும் கருணை அடிப்படையில் சத்துணவு மையத்தில் பணி நியமன ஆணை வழங்கினார். மேலும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மாரியாதை செலுத்தி ஆசிரியர்களை கவுரவித்தார்.