Spread the love

திருவண்ணாமலை செப், 2

கீழ்பென்னாத்தூர் தாலுகாவுக்குட்பட்ட நாரியமங்கலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரன் தலைமை தாங்கினார். சமூகபாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சக்கரை வரவேற்றார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு 75 பேருக்கு ரூ.21 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வீடு வழங்கும் திட்டம், தையல் எந்திரம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *