வீட்டு மின்நுகர்வோரின் நிலைக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மின்கட்டண திருத்தத்தில் இருந்து நுகர்வோர்களுக்கு பல்வேறு சலுகைகள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார். திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது போல, நிலைக்கட்டணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.