ஜெய்ப்பூர் ஏப், 8
255 பயணிகளுடன் ஜெய்பூரில் இருந்து மும்பை சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து வெடி குண்டு மிரட்டல் கடிதம் கிடைத்துள்ளது. பயணிகள் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.