துபாய் டிச, 4
ஐக்கிய அரபு அமீர்சகத்தின் 53வது (Eid Al Ethihad ) தேசிய தினத்தை கொண்டாட்டம் அமீரகத்தில் வசிக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர்கள் (KEO) தனது குடுமபத்தினருடன் துபாயில் உள்ள சபீல் பூங்காவில் தாஹிர் வரவேற்புரை நிகழ்த்த அமைப்பின் தலைவர் நூருல் ஹக் மற்றும் செயலாளர் நாசர் விளக்கவுரை நிகழ்த்த சிறப்பாக நடைபெற்றது.
இக்கொண்டாட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள், திறன்களை ஊக்குவிக்கும் விதமான கேள்வி பதில்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்கள்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நிருபர் கமால் கேவிஎல், தினகுரல் தேசிய தமிழ் நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, செயறத்தர் ஜெகபர்தீன், அவுக்கூர்ஷா ஹாஜா மைதீன், மற்றும் ஈமான் செயற்குழு உறுப்பினர்கள் ரியாஸ், ஹாமீத், இம்தாதுல்லா மற்றும் இன்ஸ்டா தஞ்சை நசீர், சமூக சேவை ராஜன், ஹபீப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.