கேரளா ஆக, 31
மூணாறு, இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே குடையாந்தூரில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையடிவாரத்தில் இருந்த வீடு நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் அப்படியே புதைந்து போனது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மண்ணில் புதைந்த சோமன் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தநிலையில் சோமன் உள்பட 5 பேரின் உடல்களும், குடையாந்தூருக்கு கொண்டுவரப்பட்டது. பல்வேறு தரப்பினரும் பலியானவர்களின் உடல்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே கேரள மாநில வருவாய்த்துறை அமைச்சர் ராஜன், நீர்ப்பாசன துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், இடுக்கி டீன் குரியா கோஸ் ஆகியோர் நேரில் வந்து, நிலச்சரிவில் பலியானவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.