Spread the love

துபாய் செப், 22

ஐக்கிய அரபு அமீரக துபாய் ஊத் மேத்தா பகுதியில் லாம்சி பிளாசா எதிரே ராகம் என்ற பெயரில் புதியதோர் சைவ உணவகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்வுணவகத்தினை தென்னிந்தியாவின் பிரபல நடிகையான கீர்த்திசுரேஸ் உணவகத்தின் நிறுவனர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார் அவரோடு எழுத்தாளரும் நடிகருமான ஜோய் மல்லூரி உணவகம் திறப்பில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளரும் ஊடகவியலாளருமான ஹமீது யாசின், ECH நிறுவனத்தின் நிறுவனர் இக்பால், தினத்தந்தி மேலாளர் ராம் தமிழகத்தின் தமிழ் தேசிய நாளிதழ் தினகுரல் வளைகுடா தலைமை நிருபரும் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் இதய ஆசிரியருமான நஜீம் மரிக்கா, ஊடகவியலாளர் நசீர் அஹமத், உள்ளிட்ட பல பிரபல ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியினை ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா மற்றும் ஸ்பிரேட் ஸ்மைல் குழுவினர்கள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் ராகம் உணவகத்தின் நிறுவனர்கள் மஹாதிர் முஹம்மது, முஹம்மது கமாலுதீன், அம்ஜத் பாஷா அன்வர் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்று அனைவருக்கும் நன்றி கூறி கௌரவித்தார்.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *