சென்னை செப், 15
தொட்டில் குழந்தை திட்டம் செயல்படவில்லை முடங்கி இருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயலலிதா தொடங்கி வைத்த அந்த திட்டம் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதாகவும் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், அந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுவதாகவும் அதிமுக அரசை விட தற்போது அதிக நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.