சென்னை ஆக, 14
ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த மூன்று பேரூராட்சிகளும் நகராட்சிகள் ஆவதற்கு தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும் சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது. இதனை அடுத்து உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்.