சென்னை ஜூலை, 30
தமிழகத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நீலகிரி கோவை மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என்று கூறியுள்ளது.