Spread the love

கீழக்கரை ஜூலை, 16

தமிழகம் முழுவதும் நேற்று(15.07.2024) கல்வி தந்தை காமராஜரின் 122 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கீழக்கரை மக்தூமியா மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.

பழைய குத்பா பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டி தலைவர் அல்ஹாஜ் ஹாஜா ஜலாலுதீன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி அனைவரையும் வரவேற்றார்.

காமராஜரின் பெருமைகளைப்பற்றி பள்ளி மாணவர் மாணவியர் உரையாற்றினர்.நிகழ்ச்சியை பள்ளியின் ஆசிரியர் லலிதா தொகுத்து வழங்கினார்.

கல்வியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்,மாணவியருக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.விழாவில் பழைய குத்பா பள்ளி ஜமாத் செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான மூர் நவாஸ்,பொருளாளர் சுல்தான்,ஜமாத் கமிட்டி உறுப்பினர் ஜகுபர் சாதிக்,மக்தூமியா துவக்கப்பள்ளியின் தாளாளர் மீராசா,தலைமையாசிரியர் முகம்மது ரிஸ்வானா,முன்னாள் மாணவர் கீழை ராசா என்ற ரஜாக்கான் மற்றும் பெற்றோர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் நமது வணக்கம் பாரதம் இதழின் மாவட்ட நிருபர் கீழை ஜஹாங்கீர் அரூஸிக்கு பள்ளியின் சார்பில் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *