ராமேசுவரம் ஆக, 29
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு விசைப்படகு மற்றும் 6 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற படகுடன் 6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்தும், பாரம்பரிய கடல் பகுதியில் மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று ஒருநாள் ராமேசுவரத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது