கீழக்கரை ஆக, 28
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் கீழக்கரை நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் வாராந்திர கூட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த வாரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர், நகராட்சி சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளர் சக்தி மற்றும் நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.