குஜராத் ஜூன், 21
பதுக்கல் அதிகரிப்பால் பூண்டு விலை கிலோ ரூ.350 ஆக உயர்ந்துள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மாநிலங்களில் தான் பூண்டு அதிகம் சாகுபடி செய்து நாட்டின் ஒட்டுமொத்த தேவையை பூர்த்தி செய்கின்றனர். இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து வர்த்தகர்கள் கிடங்குகளில் இருப்பு வைத்துள்ளனர். இதனால் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு விலை உயர்கிறது.