Spread the love

மதுரை மே, 29

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அ.வல்லாலப்பட்டியில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் விவசாயிகளிடம் கலந்துரையாடல் நடத்திவருகின்றனர்.

அதன் பங்காக மாணவர் சோலேஷ் நெல்லில் முனை வெட்டுதல் பற்றி செயல்முறை விளக்கமளித்தார். இலைப்பேன் நெல் இலைகளின் நுனியில் முட்டையிடும். இலைப்பேனிடமி௫ந்து தாவரங்களைப் பாதுகாக்க, நெல்

இலைகளின் நுனிகளைக் கத்தரிக்கோலால் வெட்ட வேண்டும். இது நாற்றங்கால் பருவத்தில் செய்யப்பட

வேண்டிய செயல். இவ்வாறான கருத்துக்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டு பயன்பெற உதவியது இச்செயல்முறை விளக்கம்.

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *