உளுந்தூர்பேட்டை மே, 10
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் வனவியல் விரிவாக்க மையம் அருகில் காவல் துறையினர் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு டிராக்டரை மடக்கி சோதனை செய்ததில் அதில் உரிய பாதுகாப்பின்றி கிணற்றுக்கு வைக்கப்படும் வெடிபொருட்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த டிராக்டரை காவல் துறையினர் தீவிர சோதனை செய்ததில் அதில் ஒரு பெட்டியில் 211 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 229 டெட்டனேட்டர் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் உரிய பாதுகாப்பின்றி டிராக்டரில் எடுத்துச் சென்ற டிராக்டர் டிரைவர் எலவனாசூர்கோட்டை பகுதியை சேர்ந்த குப்பன் (40), அவருடைய உதவியாளர் வடிவேல் (48) ஆகிய இருவரிடம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.