Spread the love

கிருஷ்ணகிரி ஏப்ரல், 26

தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், துப்புறவு ஆய்வாளர் நடேசன், கெலமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமிபதி, சுகாதார ஆய்வாளர் கார்த்திக் மற்றும் சுகாதார பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு, மலேரியா நோய் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *