Spread the love

ஏப்ரல், 10

பொதுவாக இந்த 2024 ஆம் ஆண்டில் ரம்ஜான் பண்டிகையானது ஏப்ரல் 11 ம் தேதி வருகின்றது. ரமலான் என்பது இஸ்லாமியர்களின் நாட்காட்டியில் 9 ஆவது மாதமாகும்.

இஸ்லாமியர்களுக்கு இம்மாதம் ரம்ஜான் மற்றும் ரமலான் என்றும் அழைக்கப்படுகிறது. இப்படி இஸ்லாமியர்களின் புனித மாதமான இந்த ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.

பொதுவாக ரமலான் நோன்பு இஸ்லாமிய மதத்தில் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.

இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளின் படி, முஹம்மது சாஹேப் (இஸ்லாமிய தீர்க்கதரிசி) கி.பி. 610 -இல் இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆன் ஷெரீப்பைப் பற்றி அறிந்தபோது, அதிலிருந்து ரமலான் மாதமானது இஸ்லாமிய மதத்தின் மிக முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. மேலும் இது ஒரு புனிதமான மாதமாக கருதப்படுகிறது.

இஸ்லாமிய மதத்திற்கு இந்த மாதம் மிகவும் புனித மாதமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், குர்ஆனின் படி, நபியை அல்லாஹ் தனது தூதராக தேர்ந்தெடுத்தார். இதனால் தான் இது புனித மாதமாக இருக்கிறது.

மேலும் இந்த நோன்பு இருக்கும் காலத்தில் அவர்கள் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி, ரம்ஜான் மாதமானது சுயகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய மாதமாக இருக்கிறது. மேலும் முஸ்லீம்கள் இந்த ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதற்கு முக்கிய காரணம் ஏழைகளின் வலிகளையும், வேதனைகளையும் புரிந்து கொள்வதற்கு என்று சொலல்ப்படுகிறது.

அதாவது, ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம், உலகில் வாழும் ஏழைகளின் வலி மற்றும் துன்பங்கள் உணரப்படுகின்றன. நோன்பு இருக்கும் நேரத்தில், கண், மூக்கு, காது மற்றும் நாக்கு போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

அதாவது நோன்பு இருக்கும் நேரத்தில், கெட்டதைக் கேட்கவோ, கெட்டதைப் பார்க்கவோ, கெட்டதாகப் பேசவோ மற்றும் கெட்டதாக உணரவோ கூடாது என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அவர்களிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களை கைவிடவும் வழிசெய்கிறது.

மேலும் இந்த புனிதமான மாதத்தில் விரதம் இருப்பவர்களின் பாவங்கள் தூப தீயில் எரிந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், மனம் தூய்மையாகி, விரதத்தின் போது அனைத்து கெட்ட எண்ணங்களும் மனதில் இருந்து நீங்கிவிடுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

ரம்ஜானின் 5 தூண்கள்:-

ரமலான் ஆனது இஸ்லாத்தின் 5 தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இது தொண்டு, நல்ல செயல்கள் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றைக் காட்டும் கொள்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது. மேலும் இஸ்லாத்தின் 5 தூண்கள் என்று செல்லக்கூடியவை மதத்தில் உண்மையான நம்பிக்கை, நமாஸ் வழங்குதல், ஜகாத் அதாவது தர்மம் மற்றும் ஹஜ் செய்தல் ஆகியவை அடங்குகிறது.

ரமலான் நோன்பின் சிறப்புகள்:

பொதுவாக ரம்ஜான் மாதமானது சிறப்பு பெற்ற மாதமாக தான் இருக்கிறது.

ரம்ஜான் மாதம் இஸ்லாமியர்களுக்கு நன்மைகள் செய்யும் மாதமாக இருக்கிறது.

அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பை பெறும் மாதமாக இந்த மதம் இருக்கிறது.

நோன்பு இருக்கும் காலத்தில் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல் போன்ற நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன.

பொதுவாக வாழ்வில் எந்தவித தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் இருப்பது நன்மை தரக்கூடிய விஷயம் அதுவும் ரம்ஜான் நோன்பு இருக்கும் காலத்தில் சிகரெட், புகையிலை போன்ற கெட்ட பழக்கங்களை உட்கொள்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதமாக இம்மாதம் இருக்கிறது.

ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாள்கள் மறுமையில் நரக வேதனையை விட்டு காப்பாற்ற காக்கும் அல்லாஹ்வின் கருணையை வேண்டி இறைஞ்சி கெஞ்சி கேட்டும் மீட்சி பெறும் மாட்சியுடைய நாட்களாக கருதப்படுகிறது.

ரமலான் மாத கடைசி பத்து நாள்களில் ஓர் இரவில் லைலத்துல் கத்ரு என்னும் சிறப்பான இரவு உள்ளது. அந்த இரவில்தான் குர்ஆனின் முதல் சில வசனங்கள் முதன் முதலாக அருளப்பட்டது. அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட அதாவது முப்பதாயிரம் நாள்களைவிட மேலானது. இரவு என்பது ஒரு நாளில் பாதி. அதாவது, முப்பதாயிரம் நாள்களை இரண்டால் பெருக்கினால் அறுபதாயிரம் இரவுகளைவிட மேலானது என்று ஹஜ்ரத் முகமது அலி விளக்குகிறார்.

குறிப்பாக இந்த கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் என்னும் அரபி சொல்லுக்கு தங்கியிருத்தல், தரிபடுதல் என்று பொருள். ரமலான் மாத கடைசி பத்து நாள்கள் மசூதியில் தங்குவதற்கு இஃதிகாப் என்று பெயர்.” “நீங்கள் மசூதிகளில் தங்கியிருக்கும் நிலையில்’’ என்ற 2-187 ஆவது வசனம் இஃதிகாப் இருக்கும்பொழுது தவிர்க்க வேண்டியதைக் குறிக்கிறது.

உலக, குடும்ப வேலைகள் அனைத்தையும் மறந்து துறந்து தூய இறைவனின் இனிய நினைவில் மூழ்கி திளைத்து இளைப்பின்றி களைப்பின்றி கருணையாளன் அல்லாஹ்வை வணங்குவதே இஃதிகாப்‌‌ எனவே இந்த புனிதமிக்க ரமலான் கடைசி பத்து நாட்களை இஃதிகாப் முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஹஜ்ரத் முகமது அலி கூறுகிறார்.

இத்தகைய புனித மாதத்தில் நோன்பிருந்து அல்லாவின் அருளை அடைய அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்களை எங்களது வணக்கம் பாரதம் இதழின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *