கீழக்கரை ஆக, 27
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்தும், பல்வேறு இடங்களில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றம் செய்து தரும்படியும், நகராட்சிக்குட்ட பகுதியிலேயே மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக பணியாளர்களை அமைத்து தருவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பாளரையும், உதவி பொறியாளரையும்,செயற்பொறியாளரையும், கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா நேற்று நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தார்.
அக்கோரிக்கையை உடனடியாக ஆய்வு செய்து சரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்நிகழ்வின்போது நகராட்சி பொறியாளர் மீரான் உடனிருந்தார்.