Spread the love

துபாய் மார்ச்.21

ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் போர்ட் சயீத் பகுதியில் உள்ள ஜவஹர் கார்டன் ஸ்டார் ஹோட்டலில் சில்லர் பாயிண்ட் குரூப் நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு விழா அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சரவணன் தலைமையில் தொகுப்பாளி அருணா வீரராகவன் தொகுத்து வழங்க முத்தமிழ் பாலு, UTS UAE தமிழ் சங்கம் ரமேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அமீரகத்தை சேர்ந்த அஹமது காலித், ஹைதம் முஹம்மது, தமிழ் மன்றம் தலைவர் பொன்ராஜ் டேனியல் மற்றும் செயலாளர் செந்தில், கேப்டன் தொலைக்காட்சி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், TEPA அமைப்பின் தலைவர் முனைவர் பால் பிரபாகர், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா, மாடலிங் மற்றும் திரைப்பட நடிகை வர்ஷினி, கள்ளக்குறிச்சி சின்னா, ரெஸ்கேர் ஹோம் ஹெல்த் கேர் நிர்வாகிகள் ரம்ஜத் சேக், சஞ்சீவ் சி யேபன், ஜீஜோ ஜேக்கப், மகளீர் குரூப் கலைவாணி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நிறுவனத்தின் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது

மேலும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு உபசரிக்கப்பட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சரவணன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

M.நஜீம் மரைக்கா B.A.,//இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *