Spread the love

மார்ச், 21

சிந்திக்க வைக்கும் ஒரு சிறிய கதை:

துறவி ஒருவர் தனக்கு தேவையான பொருட்களை தூக்கிக்கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார். செங்குத்தான மலை எனவே மேலே ஏற ஏற சுமை அதிகமாகி மூச்சு வாங்க துவங்கியது. அவருக்கு சற்று தூரம் இன்னும் முன்னாள் போனதும் அங்கே ஒரு மலைவாழ் சிறுமி தனது மூன்று வயது தம்பியை தூக்கிக்கொண்டு உற்சாகமாக பாடல் ஒன்றை பாடிக்கொண்டு மிகச் சாதாரணமாய் மலை உச்சியை நோக்கி போவதை பார்த்தார். ” இவ்வளவு சிறிய பையை தூக்கிக் கொண்டு மலையேர என்னால் முடியவில்லையே, உன்னால் எப்படி அம்மா இவ்வளவு பெரியவனை தூக்கிக் கொண்டு ஏற முடிகிறது..??” எனக் கேட்டார்.

அதற்கு அந்த சிறுமி பதில் சொன்னார் “ஐயா… நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது ஒரு சுமையை. ஆனால் நான் தூக்கிக் கொண்டிருப்பதோ என் தம்பியை…!” துறவிக்கு புரிந்தது..

அன்பு எதையும் சுமக்கும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *