சென்னை பிப், 29
அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஐந்து வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.