லண்டன் பிப், 28
இந்திய கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தெரிகிறது. தொடை தசை வலி காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாதியிலேயே ராகுல் விலகினார். அவர் இன்னும் குணம் அடையாததால் அவரை சிறந்த சிகிச்சைக்காக லண்டனுக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டிலும் அவர் விளையாட மாட்டார் என தெரிகிறது.