திருச்செந்தூர் ஜன, 7
வெள்ளத்தால் 20 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கத் தொடங்கியது. கடந்த 17ம் தேதி தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில்வே பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் பாலம் சரி செய்யப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ரயில் இயக்கப்பட்டது.