சென்னை டிச, 4
சென்னையில் தமிழக அரசுடன் இணைந்து ரேசிங் ப்ரோமோஷன் நிறுவனம் ஃபார்முலா-4 கார்பந்தயத்தை நடத்த உள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது