சென்னை நவ, 11
ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வேதுறை எச்சரித்துள்ளது. தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 67, 164 மற்றும் 165 இன் கீழ் ரூ.1000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.