Spread the love

ஆகஸ்ட், 21

தெலுங்கில் ‘வர்ஷம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை திரிஷா கிருஷ்ணன். தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது திரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அவர் விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை திரிஷா தனது 39வது வயதில் அரசியல் வாழ்க்கையை தொடங்க விரும்புவதாக கூறப்படுகிறது. திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால், இது குறித்து திரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரசின் மூத்த தலைவர்கள் திரிஷாவை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசி வருவதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. ஏற்கனவே காங்கிரசில் இணைந்து பணியாற்றிய நடிகை குஷ்பு பாஜக. வில் சேர்ந்து விட்டதால் திரிஷாவை கட்சியில் இணைத்து பிரசாரத்துக்கு பயன்படுத்தி காங்கிரசுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்த கட்சியினர் திட்டமிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து திரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *