Spread the love

ஜெயங்கொண்டம் செப், 22

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், கிளார்க் உள்ளிட்ட அனைவருக்கும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அவர் பேசும்போது, ஊராட்சிகளில் தண்ணீர் தேங்க விடாமல் பாதுகாப்பது மருந்து தெளிப்பது, அந்தந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் எடுத்துக் கூறி டெங்கு காய்ச்சல் வராமல் எப்படி ஊராட்சிகளை வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் எடுத்துக் கூறினார்.

இந்த கூட்டத்திற்கு மருத்துவர் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *