Spread the love

சென்னை ஜூலை, 27

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும் 28ம் தேதி நடத்தப்பட இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மீன் வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணி துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான, இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங், வரும் 28ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி துவக்க விழா காரணமாக, 28ம் தேதி, அரசால் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அன்றைய நாளில் திட்டமிடப்பட்டுள்ள சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1ம் தேதி காலை 10:00 மணிக்கு நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *