Spread the love

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 18

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டானந்தன் கிராமத்தில் சுதந்திர தினத்தன்று சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி காவல்துறையினர் காட்டானந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், 200 லிட்டர் சாராயத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் கீழ்குப்பம் மற்றும் சின்னசேலம் காவல் நிலையங்களில் இதுகுறித்து நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அதில் சாராயம் விற்பனை செய்யும் நபர்களிடம் தொடர்பில் இருந்ததாக தெரியவந்த காவல்துறையினர்களை வேறு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் பகலவன் உத்தரவிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *