Spread the love

சென்னை ஜூலை, 27

பள்ளிகள், மாணவர்களுக்கு அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகியவற்றை பலப்படுத்தும் விதமாக அமைய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால், படிப்பு தானாகவே வந்து விடும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு வழங்குவதற்காக 805 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் இந்த வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனங்களில் உளவியல் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் இடம் பெறுவர். மருத்துவ குழுவினர் பள்ளிக்கு நேரில் சென்று விழிப்புணர்வு வழங்குவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *