நெல்லை ஜூலை, 26
தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் இன்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர்.
இந்த குழுவின் தலைவர் ராஜா எம்.எல்.ஏ., உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சதன் திருமலைகுமார், முகமது ஷா நவாஸ், ராஜ்குமார், செல்லூர் ராஜூ மற்றும் செயலாளர் ஸ்ரீனிவாசன், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று முதலாவதாக நெல்லையை அடுத்த பொன்னாக்குடியில் நடைபெற்று வரும் நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை இந்த குழு ஆய்வு செய்தது.
அதன்பின்னர் பாளை மகராஜாநகரில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே மேம்பால பணியை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது ரெயில்வேத்துறை சார்பில் நடக்கும் பணிகள் தொடங்கப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பணிகளை விரைந்து தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்திடம் மதிப்பீட்டுக்குழு கேட்டுக் கொண்டது.
தொடர்ந்து மேடை போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்தனர். பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பணி, அங்குள்ள உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திரு.ஜான் பீட்டர்.
நெல்லை மாவட்ட செய்தியாளர்.