சென்னை ஏப்ரல், 14
உலமாக்கள் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகளை பேரவையில் அமைச்சர் செஞ்சு மஸ்தான் வெளியிட்டார். அதன்படி ஆறு முதல் ஒன்பது வரை அரசுப் பள்ளியில் படிக்கும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல் உலமாக்கள், இதர பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்கள் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் உயர்த்தப்படும் என்றார்.