சென்னை ஆகஸ்ட் 14
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு சிறந்த பொதுச்சேவைக்கான முதல் அமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகள் பெறுவோர்களுக்கு 8 கிராம் தங்கப்பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.