சென்னை பிப், 8
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி விடுப்புகளை பதிவு செய்யவும் ஒப்புதல் வழங்கவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆசிரியர்கள் விடுப்பு வேண்டி எழுத்து பூர்வமாக உயர் அலுவலர்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு லீவ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.