பெரம்பலூர் ஆகஸ்ட், 12
பெரம்பலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், எப்.எல். 3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் சுதந்திர தினமான வருகிற 15 ம் தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.
சுதந்திர தினத்தன்று மேற்படி டாஸ்மாக் கடைகளும் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்களும், தனியார் மதுபான கூடங்களும் செயல்படாது என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது