Spread the love

கள்ளக்குறிச்சி ஜன, 17

கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு ஒன்றியத்தி ற்குட்பட்ட சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலைய த்தினை மாவட்ட ஆட்சியர் ஷ்வரன்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதில் பால் குளிரூட்டப்படுவது மற்றும் குளிரூட்டு நிலையங்களில் உள்ள இயந்திரங்களின் செயல்பாடுகளை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ஒன்றியத்தில் பால் பதப்படுத்துதல், குளிரூட்டுதல் பணிகளை ஆய்வு செய்து, ஒன்றியத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் வழங்கினார். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய அலுவலகம் அமைத்தல், புதிய ஆவின் பாலகங்கள் அமைத்தல், பணிகள் தொடர்பாக அறிவு ரைகளை வழங்கினார்.பால் பெருக்கு மற்றும் பால் உப பொருட்கள் தயாரிக்கவும் ஒன்றிய அலுவலகம் அமைத்து தரவும், ஆயத்த பணிகள் மேற்கொள்ளவும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சின்னசேலம் தாசில்தார் இந்திரா சின்னசேலம் யூனியன் துணை தலைவர் அன்புமணிமாறன்,, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆறுமுகம்,ஒன்றிய துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய பொது மேலாளர் ஈஸ்வர் மற்றும் இயக்குனர்கள் ஆவின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *