Spread the love

ராமநாதபுரம் ஜன, 9

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, திருப்புல்லாணி, ரகுநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், தங்கச்சிமடம், வெள்ளையன்வலசை, சிட்டாங்காடு, மொட்டையன்வலசை, களிமண்குண்டு, குத்துக்கல் வலசை, தினைக்குளம், வைர வன்கோவில், அழகன்குளம், பனைக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமாக பனை மரங்கள் உள்ளன. இங்குள்ள தென்னந் தோப்புகள் மற்றும் வீட்டின் கொல்லை புறங்களில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் விவசாயிகள் பனங்கொட்டைகளை நடவு செய்தனர். தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது.

இந்த ஆண்டில் மழை இல்லாததால் பனங்கிழங்கு முழுமையான வளர்ச்சி பெறவில்லை. இதனால் கிழங்கு பருமன் குறைந்து விளைச்சல் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். தொடக்கத்தில் ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையானது தற்போது ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நெருங்கி விட்டதால் கிழங்கின் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்பில்லை என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *