ராமநாதபுரம் ஜன, 7
ராமநாதபுரம் மண்டபம் கோயில்வாடியில் இருந்து மீனவர்கள் முருகானந்தம், கண்ணன், கோவிந்தசாமி, ஜான் ஆகியோர் நேற்று முன்தினம் காலை மீன்பிடிக்க சென்றனர் நேற்று காலை வரை அவர்கள் கரைக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காத காரணத்தால் மீனவர்கள் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.