நாமக்கல் டிச, 31
நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத் தெருவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூதாட்டி பெரியக்காள், தில்லை குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு வெடிப்பு குறித்து வட்டாட்சியர் ஜானகி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.