Spread the love

நாமக்கல் டிச, 26

பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு ஆகிய பகுதியில் பொது சுகாதாரப் பணிகளை மேற்க்கொண்டனர்.

இம்முகாமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு பகுதிகளான பாப்பாத்தி அம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, காவேரி சாலை கஞ்சிமடம் தெரு, அக்ரகாரம் தெரு ஆகிய இடங்களில் பொது சுகாதாரப் பணிகளை மேற்க்கொண்டனர். மேலும் பராமரிப்பு செய்தல், கொசு ஒழிப்பு மருந்து அடித்தல் மற்றும் பொது மக்களின் தேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *