Spread the love

திருப்பத்தூர் டிச, 21

ஆம்பூர் அடுத்த பாலூர் ஆர்.பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயன், இருளர் இனத்தை சேர்ந்த இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலம், ஹசான் மாவட்டம், கன்னிகடா கிராமத்தில் கரும்பு வெட்டும் பணிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக விஜயன் வீடு திரும்பாத நிலையில் அவரை காண அவரது உறவினர்கள் கன்னிகடா கிராமத்திற்கு சென்ற போது அங்கு அவர் கொத்தடி மையாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் விஜயனின் உறவினர்களும் அதே கிராமத்தில் கொத்தடிமைகளாக கடந்த 3 மாதங்களாக இருந்து வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர் சம்பத் என்பவர் கர்நாடக மாநிலம் ஹசான் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டில் மனு அளித்துள்ளார். அம்மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட சந்திராபட்னா வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் கன்னிகடா பகுதியில் கொத்தடிமைகளாக இருந்த விஜயன் உட்பட அவரது உறவினர்களான 11 பேரை மீட்டு வாணியம்பாடி உதவி ஆட்சியர் பிரேமலதா தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *