கோவை டிச, 18
தனியார் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது.
அத்தகைய குழந்தைகளின் கனவை நனவாக்க தனியார் சமூக அமைப்பானது, தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வானமே எல்லை என்ற ஒரு நாள் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 குழந்தைகள், இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இதில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவரும், ஒரு திருநங்கை மாணவியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்திறங்கிய மாணவ, மாணவிகளை கோவை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், வருவாய் பிரிவு அதிகாரி பூமா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.