Spread the love

கடலூர் டிச, 17

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எருமனூர் ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 11 ஏக்கர் நிலத்தை ஊராட்சி நிர்வாகம் மீட்டு அதில் கால்நடை தீவன பயிர்கள் வளர்க்கும் திட்டத்தை அமல்படுத்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் காய்கறி வகைகள், பழ வகைகள், கீரை வகைகள் மற்றும் அகத்தி, வேம்பு, கோ-4 உள்ளிட்ட தீவன பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து தீவன பயிர் மற்றும் விதைகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயிகளுக்கு தீவன பயிர் மற்றும் விதை விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், கவுன்சிலர்கள் சரவணன், பச்சமுத்து, துணை தலைவர் திருமலை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *