திருப்பத்தூர் டிச, 15
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையில் ரயில்வே காவல் துறையினர் நேற்று மாலை பிளாட்பாரத்திலும் ரயில்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த ரயிலில் உள்ள பின்பக்க பொது பெட்டியில் சோதனை செய்தபோது கழிவறையின் அருகே கேட்பாரற்று கிடந்த சோல்டர் பேக் பையில் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் குட்கா பொருள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போதைப் பொருள் கடத்தி வந்த நபர் குறித்து ரயில் பெட்டியில் விசாரணை மேற்கொண்டதில் கடத்தி வந்தவர் குறித்த விவரம் தெரியாததால் சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஓடும் ரயிலில் போதைப் கடத்திய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.