கள்ளக்குறிச்சி டிச, 10
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 11 விதமாக அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுவரில் ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஒட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர்கள் நாராயணசாமி, மாரீஸ்வரன், கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.