திருவண்ணாமலை டிச, 1
ஆரணியில் அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆரணி வட்டக் கிளையின் பேரவை கூட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை அலுவலர் சங்க கட்டிடத்தில் வட்ட கிளை தலைவர் இல.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. கிளை செயலாளர் இரா. பரசுராமன், செயலாளர் அறிக்கை வாசித்தார். பொருளாளர் சிவ. விஜயகுமார் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.
மேலும் ஜவ்வாதுமலை வட்டக் கிளை தலைவர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்பெருமாள், ஆரணி தாசில்தார் ஜெகதீசன், பல்வேறு அமைப்புகளின் வட்ட தலைவர்கள் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.